இன்று ஆவணி மாத பிறப்பையொட்டி, முதல் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன் பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். ஆடி மாதத்தில் பெரிய அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறவில்லை.

இந்த நிலையில், சுபமுகூர்த்த நாட்களில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று  முதல் வரவிருக்கும் அடுத்தடுத்த சுபதின நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பத்திரப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.