புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரிக்கு தெற்கே வங்க கடற்கரையோரம் பகுதியில் உள்ள வீராம்பட்டினம் ஊரில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறும்.

இந்த நிலையில், ஆவணி மாத பிறப்பையொட்டி, இன்று தேரோட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க உள்ளனர்.