தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆகஸ்ட் 18 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பொது தேர்வு நடைபெற்ற நிலையில் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் பொது தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் வெள்ளிக்கிழமை அதாவது இன்று ஆகஸ்ட் 18 காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. தனித்தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.