தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று  மதியம் 1.00 மணி முதல் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி மதியம் 1.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி உடையவர்கள் http://arasubus.tn.gov.in எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இப்பதவிக்கான நியமனம் முற்றிலும் வெளிப்படைத்தன்மை உடையதாக இருக்கும் என்றும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு, ஓட்டுநர் உடன் நடத்துனர் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.