கர்நாடக மாநிலத்தில் கடந்த மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து முதல்வராக சித்தராமையா பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு 2000 ரூபாய் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை 2000 ரூபாய் ஊக்கத்தொகை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றும் ஊக்கத்தொகை பெற வறுமை கோட்டுக்கு கீழ் மற்றும் வறுமை கோட்டுக்கு மேல் என்ற வேறுபாடுகள் கிடையாது எனவும் கூறியுள்ளார்.