பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வரியா ரஜினிகாந்த், அனிருத்தின் திறமை தனுஷிற்கு மட்டுமே தெரிந்திருந்ததாகவும் அதையொட்டி அவர் 3 படம் மூலம் அனிருத்தை சினிமாவில் அறிமுகம் செய்யவில்லை என்றால் அவரது பாதையே மாறியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் வெளிநாட்டிற்கு அனிருத்தை மேல்படிப்பிற்காக அனுப்பவிருந்த அவரது பெற்றோரையும் சமாதானம் செய்து, கீபோர்ட் வாங்கிக் கொடுத்து அவரது உயர்விற்கு விதை போட்டவர் தனுஷ்தான் என்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.