நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷ் தங்களது மகன் எனக்கூறி மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், தள்ளுபடி செய்த உத்தரவை மறுபடியும் ஆய்வு செய்யவேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்நிலையில், உள்நோக்கத்துடன் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர்கள் கூறுவது உண்மை என நிரூபிக்க எந்தவித ஆதாரமும் சமர்பிக்கப்படவில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.