பிரபல டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் அனிதா சம்பத். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நிலையில் 84 நாட்கள் வரை இருந்தார். அந்த நிகழ்ச்சியில் இவர் பலரிடம் சண்டை போட்டதற்காக அதிகம் ட்ரோல்களை சந்தித்தார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அனிதா சம்பத் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றார். இந்த நிலையில் தனது கணவருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று உள்ளார்.

அவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வரும் நிலையில் அந்த வீடியோவை அதில் வெளியிட்டுள்ளார். மாலத்தீவு அரசை இந்தியாவுடன் மோதலில் இருந்து வரும் நிலையில் அங்கிருக்கும் இந்திய ராணுவ வீரர்களையும் வெளியேற உத்தரவிட்டு வருகிறது. இது போன்ற சூழலில் மாலத்தீவுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்வதை தவிர்த்து வருகிறார்கள். ஆனால் அனிதா சம்பத் அங்கு சுற்றுலா சென்று எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.