தென்னிந்திய சினிமாவில் 20 வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் நடிகை திரிஷா. இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா கர்ஜனை, ராங்கி மற்றும் சதுரங்க வேட்டை 2 போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் ராங்கி திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், இயக்குனர் சரவணன் படத்தை இயக்க, லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் ரஜினியுடன் படம் முழுவதும் நடிப்பதே தனது ஆசை என நடிகை த்ரிஷா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவருடன் நடித்துள்ளேன். ஆனால், தான் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. வரும் காலங்களில் நிச்சயமாக அவருடன் அதிகம் நேரம் திரையில் இருப்பது போன்ற படம் வரும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். ‘பேட்ட’ படத்தில் ரஜினியுடன் த்ரிஷா நடித்திருந்தாலும், அது குறைந்த அளவே இருக்கும்.