உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டமானது இன்று சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதேபோல அந்த மைதானத்தில் அக்டோபர் 13, 18, 23, 27 போன்ற தேதிகளிலும் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. 2000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

மேலும் போட்டி நடைபெறும் நாட்களில் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டை காண்பித்தால் மெட்ரோ ரயிலில் இன்று இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.