BIGG BOSS வீட்டிலிருந்து முதல் ஆளாக அனன்யா வெளியேறிய நிலையில் அடுத்ததாக பவா செல்லத்துரை வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டிற்குள் வரும்போது சூழ்ச்சியும், சதியும் இருக்குமென தெரிந்துதான் வந்தேன். ஆனால் இங்கே கூடுதலாக வன்மமும் இருக்கிறது எனக்கூறி வீட்டிலிருந்து வெளியேறியுள்ளாராம்.

புதிய கேப்டன் சரவணன் இவரை ‘சோம்பேறி’ என கூறியதால் மனமுடைந்து இந்த முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் படிப்பு தேவையில்லை என்பது போல் இவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.