சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஊர்வசி எனக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்தது என்னுடைய முன்னாள் கணவர் மனோஜ்-ம் அவருடைய குடும்பத்தினரும் தான் என கூறியுள்ளார். குடிகாரி என்று என் கணவர் துரத்தி விட்டார். ஆனால், என்னுடைய முதல் கணவர் மனோஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவார்கள். என்னையும் குடிக்க வற்புறுத்தினார்கள் என்று கூறியுள்ளார்.

நடிகை ஊர்வசி முதல் கணவர் மனோஜை பிரிந்த பிறகு சிவபிரசாத் என்ற நபரை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாக இருக்கிறார். மேலும், என்னை போன்று என் மகளையும் நடிகையாக விடவே மாட்டேன். அவள் நன்றாக படித்து ஒரு நல்ல மனுசியாக சமுதாயத்தில் முன்னேற வேண்டும் என்று கூறியுள்ளார் ஊர்வசி.