நடிகர் ஷாருக்கானுக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வருவதாக வந்த புகாரின் அடிப்படையில், அவருக்கு ‘Y+’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்போவதாக மகாராஷ்டிர காவல்துறை அறிவித்துள்ளது. பதான், ஜவான் படங்கள் வெளியான பிறகு தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக மகாராஷ்டிரா காவல்துறையிடம் ஷாருக்கான் புகாரளித்துள்ளார்.

அதன்படி, ஷாருக்கானுக்கு எப்போதும் ஆறு துப்பாக்கி ஏந்திய போலீஸ் கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா முழுவதும் ஷாருக்கான் எங்கு சென்றாலும் இந்த ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.