சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போது உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மிளகு ரூ 590 ரூபாயிலிருந்து 640 ரூபாயாகவும், சர்க்கரை நாப்பது ரூபாயில் இருந்து 48 ரூபாய் வரையும், மிளகாய் தூள் 295 இல் இருந்து 310 ரூபாய் வரையும், மஞ்சள் தூள் 205 ரூபாய் இருந்து 222 ரூபாய் வரையும், துவரம் பருப்பு 155 இல் இருந்து 170 ரூபாயாகவும், உளுத்தம் பருப்பு 130 ரூபாயிலிருந்து 145 ரூபாயாக உயர்ந்துள்ளது. இவற்றைத் தவிர சீரகம், தனியா, சோம்பு மற்றும் பாசிப்பருப்பு என சமையல் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.