உத்திரபிரதேசத்தில் உள்ள பிரதாப் கட்டில் நடந்த பயங்கர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருமண நிகழ்ச்சிக்கு தம்பதி ஒருவர் சென்று விட்டு வீடு திரும்பி உள்ளனர். வீட்டுக்கு வரும் வழியில் நடு ரோட்டில் தம்பதியை வழிமறித்த மூன்று பேர், கணவனை தாக்கி விட்டு பெண்ணை காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அதன் பிறகு பெண்ணின் நகைகளை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.