அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்தில் கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. மின்சார ரயிலில் பயணம் செய்த முரளி என்பவரை ரவீந்தர் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். 

சென்னையை அடுத்துள்ள அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் முரளி என்பவருக்கும், ரவீந்தர் என்பவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஒருவர் (முரளி) படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை ரயில் பயணிகள் பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் வசிப்பவர் முரளி. இவருக்கும், ரவீந்திரனுக்கும் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரே மின்சார ரயிலில் இருவரும் வந்துள்ளனர். அப்போது ரவீந்தர் கூர்மையான கத்தியை கொண்டு முரளியை தாக்கியதில் அங்கேயே ரயிலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை அறிந்து வந்த காவல்துறையினர் வந்து அவரை கைது செய்துள்ளனர். அதேநேரத்தில் படுகாயம் அடைந்த முரளியை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார். கொலை சம்பவத்தால் அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.