கோயம்புத்தூர் மாவட்டம் அசோகபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுமியை பள்ளியின் ஆசிரியை அபிநயா மனதளவில் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

சிறுமியின் தந்தை இறைச்சி கடை வைத்திருப்பவர் என்று தெரிந்தது முதல் சுமார் மூன்று மாதங்களாக சிறுமியை கடுமையாக திட்டியும் சக மாணவர்களின் ஷூவை தனது பர்தாவால் துடைக்க வலியுறுத்தியும் வந்துள்ளார்.

இது குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறி பெற்றோர் பள்ளியின் முதல்வரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து சிறுமியை சக மாணவர்கள் முன்பு கடுமையாக நடத்தி வந்துள்ளார் ஆசிரியை அபிநயா மற்றும் ஆசிரியர் ராஜ்குமார்.

இதனால் பெற்றோர் இஸ்லாமிய அமைப்பு சிலவற்றின் உதவியோடு கல்வி அலுவலரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளது. இதனையடுத்து பள்ளியில் விசாரணை மேற்கொள்ள வந்த அதிகாரிகள் இனி இது போன்ற நடக்காது என சிறுமிக்கும் அவரது பெற்றோருக்கும் உறுதியளித்துள்ளனர்.