இன்றைய காலகட்டத்தில் மதுப்பழக்கம் ஆண்கள் இடையே அதிகரித்துவிட்டது. ஒரு சில ஆண்கள் மது குடித்துவிட்டு தங்களுடைய குழந்தைகள் மற்றும் மனைவிகளை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். குடிப்பழக்கம் காரணமாக கணவன் மனைவி இடையே சண்டை வருவதை பார்க்கும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இருப்பினும் ஒரு சில குழந்தைகள் தன்னுடைய தந்தைக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று வேறு சில முடிவுகளும் துணிச்சலாக எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தவேண்டும் என்று 16 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் பகுதியை சேர்ந்த சிறுமி விஷ்ணு பிரியா, எனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தவேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் கடிதத்தில், “என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும். எனது குடும்பம் எப்போ மகிழ்ச்சியாக இருக்கிறதோ அப்போது தான் என் ஆத்மா சாந்தி அடையும்” என கண்ணீர் மல்க கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டார்.