சென்னை அருகே பைக்கில் அதிவேகமாக சென்ற இளைஞர் நிலை தடுமாறி கீழே விழுந்த விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் அருகே இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அதி வேகமாக சென்றுள்ளார். இந்நிலையில், அந்த இளைஞர் நிலை தடுமாறி சாலையில் படுத்திருந்த மாட்டின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த விபத்தில் கிழே விழுந்த அவர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.