சமீபகாலமாகவே பலரும் வயது  வித்தியாசமின்றி மாரடைப்பால் உயிரிழந்து வருகிறார்கள். அந்தவகையில் சென்னை உடற்பயிற்சி கூடம் ஒன்றில் இளம் பெண் மருத்துவர் அன்விதா (25) உடல் எடையை குறைக்க தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டனர். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து அன்விதாவை மீட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக அன்விதா இறந்ததாக மருத்துவர்கள் கூறினர். இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.