அரசு பள்ளிகளில் அந்தந்த மாநில அரசுகளின் சார்பாக மாணவர்களுக்கு மதிய உணவானது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் உணவில் சமைப்பவர்க்ளின் கவனக்குறைவால் சாப்பாட்டில் பள்ளி, பாம்பு போன்றவை விழும் சம்பவம் பல இடங்களிலும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் தற்போது அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் ஆராரியாவில் உள்ள அரசு பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உணவில் பாம்பு இருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது