மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், முதல் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே இந்த பயிற்சி திட்டங்கள் நடத்துகிறது. 03.07.2023 முதல் 31.08.2023 வரை இரண்டு மாதங்கள் இந்தப் பயிற்சித் திட்டம் நடத்தப்படும். இந்த பயிற்சி திட்டத்தில் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் படிப்பவராகவோ, பணியாற்றுபவராக இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதத்திற்கு ரூபாய் 20,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்துகொள்வோருக்கு டெல்லியில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள், பயிற்சியில் கலந்து கொள்ள டெல்லி சென்று வருவதற்கான மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதி ரயில் கட்டணங்கள் வழங்கப்படும்.