ஆந்திரப்பிரதேசம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா விவேகானந்த ரெட்டி, கடந்த 2019-ம் வருடம் மார்ச் 15ம் தேதி கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவிலுள்ள தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் விவேகானந்த ரெட்டி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அவரை தாக்கி படுகொலை செய்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இவ்விவகாரத்தில் அரசியல் தலைவர்கள், பணியாளர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகங்கள் எழுந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த சிபிஐ அதிகாரிகள், விவேகானந்த ரெட்டி தொடர்பான அனைத்து தகவல்களையும் திரட்டி தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் புதிய திருப்பமாக இக்கொலைக்கும் ஆந்திரபிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சிபிஐ அதிகாரிகள் சந்தேகமடைந்துள்ளனர்.