சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு காலத்தில் பப்ஜி விளையாட்டு என்றாலே அதற்கு ரொம்பவும் அடிமையாக இருந்தார்கள். பல இளைஞர்கள் இந்த விளையாட்டால் மனநலம் பாதிக்கப்பட்டும் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியா சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்த நிலையில் பல சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. அதில் பப்ஜி செயலியும் ஒன்று. இந்த நிலையில் கடந்த 10 மாதங்களாக தடையில் இருந்து வருகிறது பப்ஜி.

இந்நிலையில் தற்போது பிஜிஎம்ஐ விளையாட்டுக்கு இந்திய அரசானது அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி மே 29ஆம் தேதி முதல் மீண்டும் பப்ஜி செயலி வர உள்ளது. இந்த செயலியை மீண்டும் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று கிராப்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.