தமிழகத்தில் பொதுமக்கள் தங்கள் சொந்த நிலத்திற்கு அருகில் உள்ள மின்கம்பம், மின் சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கு கட்டணம்  குறைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மொத்த மதிப்பீட்டுத் தொகையில் நிர்வாகம் மேற்பார்வை கட்டணம் 22 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் செலுத்த வேண்டிய மதிப்பீட்டுத் தொகை வெகுவாக குறைவதால் அனைத்து தரப்பினரும் பயனடைவர் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.