அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் ரிஷிகேஷ் ராய் அமர்வில் தொடர்ந்து வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இபிஎஸ் மற்றும் கட்சியினுடைய அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் அதிமுக கட்சி என்ற  மூன்று தரப்பிலும் இன்று வாதங்கள் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் வாதங்கள் இன்றைய தினம் நிறைவடைந்த நிலையில் வாதங்களுக்கு எல்லாம் பதில் அளிக்கக்கூடிய வகையில் ஓபிஎஸ் தரப்பில் பதில் வாதமானது வைக்கப்பட்டது. இதெல்லாம் முடிவடைந்த பின்னர் இந்த வாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அனைத்து தரப்பினரும் திங்கள்கிழமைக்குள் (16ஆம் தேதி) தங்களது எழுத்து பூர்வ வாதங்களை சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்திரவிட்ட நிலையில், தொடர்ந்து வாதங்களானது நடைபெற்று வந்த நிலையில் தற்போது வழக்கினுடைய தீர்ப்பானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் போது நீதிபதிகள் பல்வேறு முக்கிய கேள்விகள் கேள்விகளை எழுப்பினார்கள்.

குறிப்பாக நீதிபதிகளை பொறுத்தவரை ஜூன் மாதம் 23ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் சரியானதுதானா என கேள்வி எழுப்பினர். அதற்கு ஓபிஎஸ் தரப்பு கூட்டம் ஓரளவு சரியானது தான் என்றாலும் அதில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள், விஷயங்கள், கையாளப்பட்ட வழிமுறைகள் அனைத்தும் தவறானது என்று தெரிவிக்கப்பட்டது. மீண்டும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து தான் அனைத்து பிரச்சினைகளும் தொடங்கியதா என நீதிபதிகள் கேள்வி எழுப்ப அதற்கு ஆம் என்று ஓபிஎஸ் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

மேலும் அதிமுக தொடர்பான உட்கட்சி விவகாரம் தொடர்ந்து நீதிமன்றங்களிலேயே இருந்தால் கட்சி செயல்பாடுகளை எவ்வாறு நீர்வகிப்பீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.