மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுக மற்றும் தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காங்., ஆட்சி அமைத்தால் இரு கட்சிகளும் நெருக்கடியைச் சந்திக்கும் எனவும், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக இல்லாவிட்டால் அண்ணாமலை பதவி இழக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல, அதிமுக படுதோல்வி அடைந்தால் தலைமை நெருக்கடியைச் சந்திக்கும் எனவும் கூறுகின்றனர்.