தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் கோவையில் முதலில் அனைத்து பூத்களிலும் பாஜக ஏஜெண்டுகளை நியமிக்கட்டும், அதன் பிறகு வெல்வதை பற்றி பேசலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியுள்ளார்.

பாஜக வளர்ச்சி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், பேஸ்புக்கில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது பாஜக, களத்தில் இல்லாத பாஜக, அதிமுகவுக்கு போட்டியா? தேர்தல் களத்தில் பிற வேட்பாளர்கள் எங்களுக்கு தூசுக்கு சமானம் என தெரிவித்தார்.