தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை வகுத்து செயல்படுத்தினால் அவரோடு இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்தரநாத் எம்.பி கூறியுள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தேனி மக்களவை உறுப்பினர் ஆனார். ஆனால், வரும் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. இந்நிலையில், விஜய்யுடன் இணைந்து பணியாற்ற தயார் என அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.