காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அப்பாராவ் தெருவில் ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பினாயில், சோப்பு விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு யுவராணி என்ற மனைவியும், ஸ்ரீ நதி, கவி ஸ்ரீ என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கடன் தொந்தரவு அதிகமாக இருந்ததால் மன உளைச்சலில் இருந்த ராஜி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.