அமெரிக்காவை சேர்ந்த ஹண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அறிக்கை வெளியிட்டது அதானி குழுமதிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த 13 வர்த்தக நாட்களில் ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் சரிந்துள்ளது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் ரூ.12,40,353 கோடியாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு இன்று ரூ.4,33,297 கோடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது என கூறப்படுகிறது. மேலும் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து மூன்றாவது இடத்தில் இருந்த கௌதம் அதானி 24-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

நேற்று ஒரே நாளில் அதானி குழும பங்கு விலை 5% சரிவடைந்ததால் அவற்றின் சந்தை மதிப்பு ரூ.51,525 வீழ்ச்சி அடைந்துள்ளது. நாடாளுமன்ற மக்களவைலையும் மாநிலங்கள் அவையிலும் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்கள் எம்.எல்.ஏ சர்மா, விஷால் திவாரி ஆகியோர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டு வருகிறது.