அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகள் டிசம்பர் 7ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி மூடப்படும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இது தொடர்பாக தற்போது அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ள நிலையில், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் வளாக கல்லூரிகள் டிசம்பர் 7 முதல் டிசம்பர் பத்தாம் தேதி வரை மூடப்படுவதாக வெளியான செய்தி போலியானது.

இதனை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் யாரும் நம்ப வேண்டாம். அதே சமயம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி எந்த வாரத்தில் திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலை கல்லூரிகளில் பாட வகுப்புகளை ரத்து செய்வது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் முடிவு செய்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.