முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு பேசிய அவர், அதிமுகவை நோக்கி மாற்றுக் கட்சியை சேர்ந்த பலர் ஐக்கியமாகி கொண்டுள்ளனர். நாங்கள் பாஜக மாதிரி வலை விரித்து பிடிக்கவில்லை. நேற்று கூட அண்ணாமலை கடை விரித்தார். ஆனால் அந்த கடைக்கு யாரும் வரவில்லை. அது போனியாகாத கடை என ஜெயக்குமார் கிண்டல் அடித்தார்.