சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சபாநாயகர் பேசுகையில், முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தை தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் மகளிர் உரிமை தொகைக்காக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இப்படி மிகப்பெரிய நிதி நெருக்கடி நிலைமை அரசுக்கு இருக்கும்போதிலும் அரசு மக்களுடைய நலன்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல அமல்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ஜாக்டோ ஜியோ அமைப்பினரிடம் முதல்வர் சந்தித்து அவர்களை பேசி  உறுதிப்படுத்துள்ளார். அதன்படி அந்த வாக்குறுதி விரைவில் நிறைவேற்றுவார் என்று கூறியுள்ளார்.