சமூக ஊடகமான ‘எக்ஸ்’ (X) தளத்தில், இஸ்கான் (ISKCON) அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராதாரமண் தாஸ் மற்றும் கிரியேட்லி மீடியா உள்ளிட்டோரால் பகிரப்பட்ட 16 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும் அந்த வீடியோவில், புர்கா அணிந்த பெண் ஒருவர் பச்சையான இறைச்சியை சாப்பிடுவதும், அதனைச் சுற்றியுள்ளவர்கள் கவனிப்பதும் பதிவாகியுள்ளது. தெற்காசியப் பகுதி ஒன்றில் உள்ள இறைச்சிக் கடையில் எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த வீடியோ, குறிப்பிட்ட சமூகத்தின் கலாச்சாரம் என்ற பெயரில் பகிரப்பட்டு, நெட்டிசன்களிடையே கடுமையான விமர்சனங்களையும் காரசாரமான விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
Even devils will get an inferiority complex after watching them. pic.twitter.com/L8J9kWSONj
— Kreately.in (@KreatelyMedia) June 1, 2026
இந்த வீடியோவைக் குறிப்பிட்ட சிலர் மத அடையாளங்களுடன் ஒப்பிட்டு எதிர்மறையான கருத்துகளைப் பதிவிட்டு வரும் வேளையில், அப்பகுதியில் அது போன்ற இறைச்சிப் பகுதிகள் பொதுவான ஒரு உணவு முறைதான் என்றும் சில பயனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சமூக ஊடகங்களில் இந்த வீடியோ மிக வேகமாகப் பகிரப்பட்டு பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்து வந்தபோதிலும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் அதன் பின்னணி குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வமான ஆதாரங்களும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
