மின்சாரம் அல்லது மோட்டார் போன்ற எவ்வித நவீன கருவிகளும் இன்றி, வெறும் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் ஒரு வாளித் தண்ணீரைக் கொண்டு ‘சைஃபோன்’ முறையில் மிக எளிதாக நீரை வெளியேற்ற முடியும்.

முதலில் ஒரு பாட்டில் முழுவதையும் தண்ணீரால் நிரப்பி, அதன் இரு முனைகளையும் மூடிக்கொள்ள வேண்டும். பின்னர், ஒரு முனையை நீர் உள்ள தொட்டியிலும், மற்றொரு முனையை அதைவிடத் தாழ்வான பகுதியில் உள்ள காலி பாத்திரத்திலும் வைத்தால், புவிஈர்ப்பு விசை காரணமாகத் தண்ணீர் தானாகவே சீராக வெளியேறத் தொடங்கும்.

“>

 

எவ்வித முயற்சியும் இன்றி அதிக அளவிலான தண்ணீரை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு மாற்ற இந்த எளிய அறிவியல் நுணுக்கம் பெரிதும் உதவுகிறது.