தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் சமீப காலமாகவே அட்ஜஸ்ட்மென்ட் விவகாரங்கள் தொடர்பாக மனம் திறந்து பேசி வருகிறார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு முதல் தமிழ் சினிமா வரை முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப் ஏற்படுத்தி இருந்தார். மீ டூ என்ற அமைப்பின் மூலம் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை உள்ள அனைத்து நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் தொடர்பான சம்பவங்களை கூறி வருகிறார்கள். நடிகை நயன்தாரா கூட ஒரு பேட்டியில் தனக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருந்ததாக கூறியிருந்தார்.

அதன் பிறகு அண்மையில் வில்லன் நடிகர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சரத்குமாரின் மகள் வரலட்சுமி தனக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை நேர்ந்ததாகவும் இதனால் தனக்கு பல பட வாய்ப்புகள் பறி போனதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவரின் மகளுக்கே அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை இருக்கும் போது சினிமா கனவோடு வரும் சாதாரண பெண்களின் நிலைமை பற்றி சொல்லவா வேண்டும் என சமூக வலைதள வாசிகள் பேசிக்கொள்கிறார்கள்.