நடிகை ஸ்ரேயா மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் ரஜினியுடன் இணைந்து நடிப்பேன் என  தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரேயா சரண் தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு முன்னணியான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஸ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் Andrei Koscheev என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த தம்பதியினருக்கு ராதா என்ற பெண்குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஸ்ரேயா, சிவாஜி படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்ததை மறக்க முடியாது. அவர் மிகவும் எளிமையானவர், அவருக்கு தெரியாத விஷயமே கிடையாது. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அவருடன் இணைந்து நடிப்பேன். ரஜினியுடன் நடிக்க விரும்பாதவர் எவருமில்லை என கூறியுள்ளார்.