சினிமா துறை மட்டுமல்லாமல் இப்போது சின்னத்திரை நடிகைகள் பலரும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பற்றி புகாரளிக்க தொடங்கி இருக்கின்றனர். அட்ஜஸ்ட்மென்ட் எனும் பெயரில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கின்றனர் என பல்வேறு நடிகைகள் ஓப்பனாக புகாரளித்தாலும், இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் ஆனந்த ராகம், சுந்தரி உட்பட பல தொடர்களில் நடித்திருக்கும் ரிஹானா ஒரு ஹீரோ தன்னை அட்ஜஸ்ட்மென்டுக்காக அணுகியதாக பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

தன் அடுத்த படத்தில் நடிக்க recommend செய்கிறேன் என சொல்லி போன் நம்பர் வாங்கி, தொடர்ந்து மெசேஜ் செய்து தொல்லை கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார். அவர் எல்லை மீறி சென்றதால் ரிஹானா அவர் நம்பரை ப்ளாக் செய்து விட்டாராம். அதன்பிறகு அந்த படத்தின் சூட்டிங்கிற்கு ரிஹானாவை அழைக்கவே இல்லையாம். எனினும் அந்த ஹீரோவின் பெயரை ரிஹானா பேட்டியில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.