தமிழர் திருநாளாம் தைத்திருநாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் முக்கிய பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையை அணிந்து கொண்டு கருப்பு நிற கூலிங் கிளாஸ் உடன் சென்னை ஆவடியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சிறப்பித்தார். அதன் பிறகு பறை இசைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பெண்கள் இளைஞர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக பறையடித்தனர். அப்போது டிஜிபி சைலேந்திரபாபுவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பறையடித்தார். அப்போது பூமி அதிர மிகவும் உற்சாகத்துடன் டிஜிபி சைலேந்திரபாபு பறையடித்தார். மேலும் இந்த காட்சியை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வலைதளத்தில்வைரலாகி வருகிறது.