இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தொடர்ச்சியாக ஒன்பது கிரிக்கெட் தொடர்களில் வெற்றி பெற்று ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்தார். இவர் தலைவராக விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் சதம் அடித்தவர் மற்றும் இரண்டு ஆட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இவர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஏராளமான பெண்களுக்கு கிரஸ்சாகவும் இருக்கிறார். கோலி உலகில் சில தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர்.

உலகின் 100 பணக்கார விளையாட்டு வீரர்களுள் ஒருவராக இருக்கிறார். விராட் கோலியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாக இருக்கிறது. அதாவது இவருடைய சொத்து மதிப்பு ஆயிரம் கோடி என்று கூறப்படுகிறது. இவருக்கு கிரிக்கெட் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக வருமானம் கிடைக்கிறது. பல பாஸ்போர்ட் முதலீடு செய்துள்ளார். அதிலிருந்து 10 கோடி வரை வருமானம் கிடைக்கிறதாம். குருகிராமில் 80 கோடி மதிப்பில் ஒரு வீடு, மும்பையில் 34 கோடி மதிப்பில் ஒரு வீடு இருப்பதாக கூறப்படுகிறது. உண்மையிலேயே கோடிகளில் புரளும் ஒரு விளையாட்டு வீரராக இருக்கிறார் கோலி.