சென்னை மாவட்டத்தில் அடுத்த 30 நாட்களுக்குள் அனைத்து மருந்து கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆய்வின்போது கேமராக்கள் பொருத்தப்படாதது தெரிய வந்தால் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது. அட்டவணை X, H, H1 வகை மருந்துகளை விற்பனை செய்யும் அனைத்து கடைகளுக்கும் இந்த விதி பொருந்தும்.