தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அரசு மாநிலத்தின் நிதி நிலைமையை சரி செய்த பிறகு குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் முதல்வருடன் சேர்ந்து வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி முதல் வழங்கப்பட இருப்பதாக புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். மேலும் மக்களுக்கு எது நல்லதோ அதை செய்து கொண்டிருக்கிறோம். மக்களுக்காக செய்வதில் எந்த பாரபட்சமும் இருக்கக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் விரைவில் குடும்பத் தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.