கடந்த ஏழாம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடங்கியது. 15 நாட்களாக நீடித்து வரும் இந்த போரில் ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் காசா நகரின் இரண்டாவது பெரிய மருத்துவமனையான அல் குவாத் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக அல் ஆஹ்லி மருத்துவமனை மீது நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 500 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது இஸ்ரேல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.