இணையத்தில் உலகின் மிக முக்கிய விளையாட்டு வீரர்களான ரெனால்டோ, மெஸ்ஸி, விராட் கோலி உள்ளிட்டோரின் DP வைரலாகி வருகிறது.

உலகின் மிக பிரபலமான விளையாட்டுகளில் முதலிடத்தில் இருப்பது கால்பந்தாட்டம் ,  அதற்கு அடுத்தபடியாக இருப்பது கிரிக்கெட், இதில் கால் பந்தாட்டத்தில்,  உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி  அதே போல் கிரிக்கெட்டில் உலக அளவில் அதிக புகழ் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரான  விராட் கோலி இவர்கள் மூவரும் அவரவர் துறை சார்ந்த விளையாட்டில் அதிகமான ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டவர்கள். அதன்படி 

ரெனால்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 600 மில்லியன் ரசிகர்கள் பின்பற்றி வருகின்றனர்.  அதேபோல்,  மெஸ்ஸி அவர்களை 489 மில்லியன் ரசிகர்கள் பின்பற்றி வருகின்றனர்.  அதேபோல்,  விராட் கோலி அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 260 மில்லியன் ரசிகர்கள் பின்பற்றி  வருகின்றனர்.  இவர்கள் மூவரும் தனக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்கள்.  தங்கள் துறை சார்ந்த விளையாட்டில் அற்புதமான திறமையை  தொடர்ச்சியாக காண்பித்து வருகிறார்கள்.  ஏராளமாக  பணம் சம்பாதித்து ராஜ வாழ்க்கை வாழ்வது வரும் நிலையில்,

instagram பக்கத்தில் ஸ்டோரிகளில்  பெரும்பாலும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வது குறித்து பதிவிடும் பதிவுகளை விட,  குடும்பத்துடன் அதிகமான நேரம் செலவிடுவது போன்ற பதிவுகள் தான் அதிகமாக காணப்படும்.  அதேபோல்,  அவர்களது DP யிலும் குடும்பத்துடன் இருப்பது போன்ற புகைப்படத்தை அவர்கள் வைத்திருக்கிறார்கள்.  இதன் மூலம் நாம்  என்னவாக இருக்கிறோம்?  எப்படி இருக்கிறோம் ? என்பதையெல்லாம் தாண்டி நம்முடன் யார் இருக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம். நம்மோடு அனைத்து கட்டத்திலும்  பயணிக்கும் குடும்ப நபர்களே மிக முக்கியமானவர்கள் என்பதை உணர்த்துவதாக இவர்களது DP  இருப்பதாக அவர்களது ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.