தாஜிகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 5.37 மணிக்கு திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது அந்நாட்டின் முர்கோப் நகரின் மேற்கு பகுதியில் 67 கி.மீ தொலைவில் 20 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்நாட்டில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவிலும், 2வது நிலநடுக்கம் 5 ஆகவும், 3வது நிலநடுக்கம் 4.6 என்ற ரிக்டர் அளவிலும், 4வது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆகவும், 5வது நிலநடுக்கம் சீன-தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சின்ஜியாங் 4.8 ஆகவும், 6வது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆகவும் பதிவாகியுள்ளது. இப்படி அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.