தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ராம் நகரில் புதுக்குளம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கிணறு பாசனத்தை நம்பி விவசாயம் நடந்து வரும் நிலையில் கிணறு தோண்டும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இந்த கிணறு தோண்டும் பணியில் ஆணையப்பபுரம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் ஆலங்குளத்தைச் சேர்ந்த ஆசீர் சாம்சன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

இதில் கிணறு தோண்டுவதற்காக வெடி வைத்த போது திடீரென வெடிவிபத்தில் சிக்கி ஆசீர், அரவிந்த் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜலிங்கம் என்பவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெடி விபத்தில் சிக்கிய மற்றொருவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.