தமிழ் சினிமாவில் அந்நியன் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகை சதா. இவர் தன்னுடைய முதல் படத்திலிருந்து (ஜெயம்) ரசிகர்களிடையே நல்ல பிரபலமாகி விட்டார். அதன்பின் எதிரி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, அந்நியன் போன்ற பல படங்களிலும் நடித்தார். அதன்பிறகு சினிமாவில் சரிவர வாய்ப்புகள் கிடைக்காததால் நான்கு வருட இடைவெளிக்கு பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்த எலி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி  கொடுத்தார். இதற்கிடையில் 2018 ஆம் வருடம் தயாரிப்பாளராக உருவெடுத்த இவர் டார்ச் லைட் என்ற திரைப்படத்தில் நடித்து  தயாரித்திருந்தார்.

இந்த படமும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் 39 வயதை ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் குறித்து பேட்டியில் பேசியுள்ளார் சதா, அதில் திருமணம் செய்து கொண்டால் சுதந்திரத்தை இழக்கிறோம். திருமண பந்தத்தில் புரிதல் ஏற்படலாம், ஏற்படாமல் போகலாம். திருமணம் செய்து கொண்டால் என்னுடைய ஆசையை தொடர முடியாமல் போகலாம். பல திருமணம் செய்து தோல்வியில் பிரிந்து செல்கிறார்கள். அதனால் எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பகீர் கருத்து இணையத்தில் பரபரப்பை கிளப்பி வருகிறது.