நடிகர் சூர்யா தனது பிறந்த நாளை  நேற்று கொண்டாடினார். இதற்கு திரை பிரபலங்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ஆந்திர மாநிலத்தில் அவருடைய ரசிகர்கள் சூர்யாவின் கட் அவுட்டுகளை கட்டிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இரும்பு கட் அவுட்டில் மின்சாரம் பாய்ந்து வெங்கடேஷ் (வயது 19), சாய் (வயது 20) ஆகிய ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்தினருக்கு தொலைப்பேசி மூலம் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். இதனை அடுத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுப்பதாகவும் சூர்யா உறுதி கூறியிருக்கிறார்.