சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாகவே கலக்கி வருகிறார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி அதன்பிறகு படிப்படியாக ஹீரோவாக உருவெடுத்தார். அன்றில்  இருந்து இன்று வரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை தக்க வைத்து வருகிறார் இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக ரஜினி நடிப்பில் வெளியாகும் படங்கள் முன்பு போல வெற்றிகளை பெறவில்லை. குறிப்பாக கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் படுதோல்வி படமாக இருந்தது. இதனால் ரஜினி மீது விமர்சனங்கள் எழுந்தது. இனி ரஜினி நடிக்க மாட்டார் அப்படி நடித்தாலும் படங்கள் ஓடாது என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதன் காரணமாக இணையத்தில் தொடர்ந்து மோதல்களும் வெடித்து வந்தது.

இந்த நிலையில் தற்போது ஜெயிலர்  படத்தில் நடித்து முடித்துள்ளன ரஜினி அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். எனவே மீண்டும் தொடர் வெற்றிகளை குவித்து தான் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்பதை  நிரூபிக்கும் வகையில் உழைத்து வருகிறாராம் ரஜினி. இந்த நிலையில் ரஜினி தான் ஏன் சூப்பர் ஸ்டார் ஆக வெற்றிகரமாக இருக்கிறேன் என்பதை குறித்தான ரகசியம் குறித்து பேசி உள்ளார். அதாவது நான் வெற்றிகரமாக  இன்றளவும் இருக்கிறேன் என்றால் அதற்கு மிக முக்கிய காரணத்தில் ஒன்று தியானம். உடலுக்கு எப்படி உடற்பயிற்சி முக்கியமோ அதேபோல மனதிற்கு தியானம் மிக முக்கியம். தினம் ஒரு அரை மணி நேரம் ஒரு இடத்தில் அமர்ந்து தியானம் செய்து வந்தால் மனதிற்கு அமைதி நிலவும். எனவே நாம் செய்யும் செயலில் தெளிவு ஏற்படும் என்று கூறினார்.